/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவனை காப்பாற்றிய டாக்டர்களுக்கு பாராட்டு துரிதமாக செயல்பட்ட குழுவினர்
/
மாணவனை காப்பாற்றிய டாக்டர்களுக்கு பாராட்டு துரிதமாக செயல்பட்ட குழுவினர்
மாணவனை காப்பாற்றிய டாக்டர்களுக்கு பாராட்டு துரிதமாக செயல்பட்ட குழுவினர்
மாணவனை காப்பாற்றிய டாக்டர்களுக்கு பாராட்டு துரிதமாக செயல்பட்ட குழுவினர்
ADDED : ஜூலை 10, 2024 01:48 AM

பொள்ளாச்சி;வால்பாறையை சேர்ந்தவர், அஜய், 17. இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படிக்கும் அவர், கடுமையான வயிற்று வலியில் துடித்தபடி அவசர சிகிச்சை பகுதிக்கு வந்தார். இவருக்கு, வால்பாறை மலைப்பகுதியில் உள்ள எஸ்டேட் மருத்துவமனையில் முதலுதவி செய்து, அறுவை சிகிச்சைக்காக, வால்பாறை டாக்டர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பகுதிக்கு, கடந்த, 7ம் தேதி அனுப்பி வைத்தனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகேசன், அஜய் உடல்நிலயை பரிசோதனை செய்து, ரத்த பரிசோதனை, ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்தார். ஒட்டு குடல் பகுதியில் சீல்பிடித்து இருந்தது தெரியவந்தது. அவருக்கு உடனடியாக லேப்ராஸ்கோபி வாயிலாக, அவசர அறுவை சிகிச்சை கடந்த, 7ம் தேதி இரவு, 11:00 மணிக்கு செய்யப்பட்டது.
மயக்கவியல் டாக்டர் பிரபு, செவிலியர் கனகா, அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளர் தர்மு மற்றும் அறுவை சிகிச்சை பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு செவிலியர் மகேஸ்வரி மற்றும் ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டனர்.
உயிருக்கு போராடிய மாணவரை காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் டாக்டர்கள் பாராட்டு தெரிவித்தனர். தந்தை இல்லாத நிலையில், தன்னுடைய மகனை காப்பாற்றிய டாக்டருக்கு, அஜயின் தாய் வாசுகி நன்றி தெரிவித்து கடிதம் வழங்கினார்.
டாக்டர் குழுவினர் கூறுகையில், 'மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் செய்வது போன்று, இரவு நேரத்தில் உயிர் காக்கும் அவசர அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோபி கருவி வாயிலாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டது.
லேப்ராஸ்கோபி கருவி வாயிலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மணவர், ஒரு வாரத்துக்குள் இயல்பு நிலை திரும்பி கல்லுாரிக்கு சென்று படிப்பை தொடர முடியும்,' என்றனர்.