/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணிக்க விநாயகருக்கு கும்பாபிேஷகம்
/
மாணிக்க விநாயகருக்கு கும்பாபிேஷகம்
ADDED : செப் 05, 2024 11:33 PM
கோவை:வெள்ளலுார், மகாலிங்கபுரத்தில் அமைந்துள்ள, மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நாளை மறுநாள் நடக்கிறது.
இதற்கான விழா நாளை பிற்பகல், 3:30 மணிக்கு, செல்வ முத்துக்குமாரசாமி கோவிலில் இருந்து, மாணிக்க விநாயகர் கோவிலுக்கு, தீர்த்தக்குடங்கள், முளைப்பாலிகை எடுத்து வருதலுடன் துவங்குகிறது.
மாலை, 5:00 முதல் 6:00 மணி வரை கோபுர கலச ஸ்தாபனம், அபிேஷகம், விக்னேஷ்வர் பூஜை, கும்ப அலங்காரம் நடக்கிறது. 6:00 மணிக்கு முதல்கால யாக சாலை பூஜையும், இரவு, 10:00 மணிக்கு, மாணிக்க விநாயகர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடக்கின்றன.
நாளை மறுநாள் (செப்., 8ம் தேதி) காலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜையை தொடர்ந்து, 7:30 மணிக்கு, மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
9:30 மணிக்கு, அன்னதானமும், 11:00 மணிக்கு, மகா அபிேஷகமும், மதியம், 12:00 மணிக்கு, மகா தீபாராதனையும் நடக்கிறது.
செப்., 9ம் தேதி முதல் 48 நாட்களுக்கு, தினமும் மாலை, 6:00 மணிக்கு மண்டலபூஜை நடக்கிறது.