sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கும்பாபிஷேக விழா வேள்வி பூஜையுடன் துவக்கம்

/

கும்பாபிஷேக விழா வேள்வி பூஜையுடன் துவக்கம்

கும்பாபிஷேக விழா வேள்வி பூஜையுடன் துவக்கம்

கும்பாபிஷேக விழா வேள்வி பூஜையுடன் துவக்கம்


ADDED : ஜூலை 08, 2024 11:35 PM

Google News

ADDED : ஜூலை 08, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்;குருக்கம்பாளையம், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று வேள்வி பூஜையுடன் துவங்கியது.

கணேசபுரம் அருகே குருக்கம்பாளையத்தில் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக முன் மண்டபம், புதிய கோபுரம் அமைக்கப்பட்டு, சுற்றுப் பிரகார வேலைகள் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழா, நேற்று துவங்கியது. காலையில் கணபதி ஹோமம் நடந்தது. மதியம் நவகிரக ஹோமம், காப்பு கட்டுதல் நடந்தது. முதற்கால வேள்வி பூஜையில் கணேச புரம், அன்னூர், கானூர் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இன்று (9ம் தேதி) காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், புதிய சுவாமி சிலைகளுக்கு அபிஷேக பூஜையும் நடக்கிறது. மதியம் விமான கலசம் பிரதிஷ்டை செய்தலும், மாலையில், 108 ஹோம திரவிய சமர்ப்பனமும் நடக்கிறது.

நாளை (10ம் தேதி) காலை 6:30 மணிக்கு, விமான கோபுரத்திற்கும், மூலஸ்தான மாகாளி அம்மனுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு குழந்தைகளின் நடன நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை குருக்கம்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us