sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

/

செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்


ADDED : ஆக 18, 2024 10:39 PM

Google News

ADDED : ஆக 18, 2024 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்:குமாரபாளையம் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 23ம் தேதி நடக்கிறது.

அன்னூர் அருகே குமாரபாளையம், அன்பு நகரில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக வடக்கு நோக்கி சன்னதியும், கருங்கல்லினால் கருவறையும் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபம், முன் மண்டபம் கட்டப்பட்டுள்ளன. கொற்றவை, பாலமுருகப் பெருமான், நாகர் உடன் கன்னிமூல கணபதியும் நிறுவப்பட்டுள்ளன.

கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி மாலை 3:00 மணிக்கு, தீர்த்தக்குட ஊர்வலத்துடன் துவங்குகிறது. இதை தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடும், முதற்கால வேள்வி பூஜையும், விமான கலசங்கள் நிறுவுதலும் நடக்கிறது.

வரும் 23ம் தேதி காலை 7:15 மணிக்கு, விமானத்திற்கும், மூலமூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us