sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாவோயிஸ்ட் நடமாட்டம்; வனத்துறையினர் ஆய்வு

/

மாவோயிஸ்ட் நடமாட்டம்; வனத்துறையினர் ஆய்வு

மாவோயிஸ்ட் நடமாட்டம்; வனத்துறையினர் ஆய்வு

மாவோயிஸ்ட் நடமாட்டம்; வனத்துறையினர் ஆய்வு


ADDED : ஜூலை 03, 2024 10:08 PM

Google News

ADDED : ஜூலை 03, 2024 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் : மாவோயிஸ்ட் மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் தமிழக, கேரளா எல்லை பகுதிகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம் -கோத்தகிரி ரோட்டில் மலைப்பாதை தடுப்பு சுவரில் இந்திய இறையாண்மைக்கு எதிராக 'இந்தியா ஒழிக' என, எழுதி இருந்தது. இச்சம்பவத்தின் எதிரொலியாக தமிழக, கேரள மாநில எல்லையை ஒட்டிய காரமடை வனப்பகுதியில் நேற்று முன்தினம் கியூ பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சரவணன் மற்றும் வனத்துறையினர் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட தமிழக, கேரள எல்லை பகுதியான ஆனைகட்டி, கோபநாரி, கூடப்பட்டி, எழுத்துக்கல்புதூர் பவானி ஆற்று கரையோர பகுதிகளில் நக்சல், மாவோயிஸ்ட் மற்றும் கள்ளச்சாராயம் குறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும், பொது மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதி பொதுமக்களிடம், புதிய நபர்கள்நடமாட்டம் உள்ளதா எனவும், இருந்தால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us