sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் ; பக்தர்கள் பரவசம் 

/

மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் ; பக்தர்கள் பரவசம் 

மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் ; பக்தர்கள் பரவசம் 

மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் ; பக்தர்கள் பரவசம் 


ADDED : மார் 05, 2025 10:28 PM

Google News

ADDED : மார் 05, 2025 10:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த, 11ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தேர்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

அதிகாலை, 6:00 மணி முதலே பெண்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வர துவங்கினர். காலையில், ஊர் மணியக்காரர் இல்லத்தில் இருந்து அம்மனுக்கு மாங்கல்ய சீர் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில், தங்க கிரீடம், சூலாயுதம், பட்டுப் புடவை வழங்கப்பட்டன.

பொள்ளாச்சி நகை தொழிலாளர்கள் சார்பில், அம்மனுக்கு ஆபரணங்கள் வழங்கப்பட்டன. தையல் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், அம்மனுக்கு சீர் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. சிறப்பு ேஹாமங்கள் நடைபெற்றன. அதன்பின், உரலில் மஞ்சள் இடிக்கும் வைபவம் நடந்தது.

சூலத்தேவருக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மஞ்சள் சரடு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us