sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பருவமழை துவங்கியது; பசுமை பணியும் ஆரம்பம் வனத்துக்குள் திருப்பூர்-10 திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு

/

பருவமழை துவங்கியது; பசுமை பணியும் ஆரம்பம் வனத்துக்குள் திருப்பூர்-10 திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு

பருவமழை துவங்கியது; பசுமை பணியும் ஆரம்பம் வனத்துக்குள் திருப்பூர்-10 திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு

பருவமழை துவங்கியது; பசுமை பணியும் ஆரம்பம் வனத்துக்குள் திருப்பூர்-10 திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு


ADDED : மே 24, 2024 10:37 PM

Google News

ADDED : மே 24, 2024 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, - பருவ மழை முன்னதாகவே துவங்கியுள்ளதால், 'வனத்துக்குள் திருப்பூர்-10' திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வெற்றி' அமைப்பு சார்பில், கடந்த, 9 திட்டங்களின் கீழ், 18 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு வருவாய் அளிக்கும் வகையில், மரச்சாகுபடி திட்டமாகவும், தொழில் நிறுவன வளாகங்கள் பசுமையாக்கும் வகையிலும், அரசு, உள்ளாட்சி அமைப்புகள், கோவில் நிலங்கள் என பாதுகாப்பான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ், மண்ணின் மரபு சார்ந்த மரக்கன்றுகள், பறவைகள் உள்ளிட்ட பல்லுயிரினங்களுக்கும் பயன் அளிக்கும் வகையில், பழ மரக்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் இலவசமாக நடவு செய்து தரப்படுகிறது.

தொடர்ந்து, மரங்களாகும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பசுமை வளர்க்கும் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

நடப்பாண்டு, பருவ மழைகள் முன்னதாகவே துவங்கியுள்ளதால், 'வனத்துக்குள் திருப்பூர்-10' திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணியும் முன்னதாகவே துவங்கியுள்ளது. நடப்பாண்டு, 3 லட்சம் என்ற இலக்குடன், முதற்கட்டமாக உடுமலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமடைந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், குடிமங்கலம், தாசர்பட்டி விவசாயி சாரதா - முத்துக்கிருஷ்ணன் விவசாய நிலத்தில், வேங்கை, காயா என, 242 மரக்கன்றுகள் நடப்பட்டது. சுற்றிலும் கம்பி வேலி, நீர் வசதியுடன் கூடிய இந்த நிலத்தில், ஏற்கனவே, திட்டம்-7 ன் கீழ், 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது, குறு வனமாக மாறியுள்ளது.

தற்போது, மீண்டும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அதே போல், ஆர்.கே.ஆர்., ஞானோதயா பள்ளியில், புங்கன், தான்றி, கொன்னை, கொடுக்காப்புளி, பாதாம், மாதுளை, குமிழ், மூங்கில், பூவரசன், பலா, மகா கனி, இலுப்பை என, 18 வகையான, 365 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், அரசு துறை அலுவலகங்கள், கோவில் நிலங்கள், தொழிற்சாலை வளாகங்கள், கல்வி நிறுவன வளாகங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில், மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், திட்ட கள இயக்குனர் சுரேந்திரன், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us