sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோட்டோர புதர் செடிகளால் வாகன ஓட்டுநர்கள் தவிப்பு

/

ரோட்டோர புதர் செடிகளால் வாகன ஓட்டுநர்கள் தவிப்பு

ரோட்டோர புதர் செடிகளால் வாகன ஓட்டுநர்கள் தவிப்பு

ரோட்டோர புதர் செடிகளால் வாகன ஓட்டுநர்கள் தவிப்பு


ADDED : ஜூலை 08, 2024 11:50 PM

Google News

ADDED : ஜூலை 08, 2024 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை;நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகளால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

சுற்றுலா தலமான வால்பாறையின், இயற்கை அழகை கண்டு ரசிக்க, நாள் தோறும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வால்பாறைக்கு வந்து செல்கின்றன.

ஆழியாறு - வால்பாறை இடையே, 40 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. அதேபோன்று, வால்பாறையில் இருந்து, அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் வழித்தடங்கள் உள்ளன.

இந்நிலையில், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதை, மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பாதையில், ரோட்டோரத்தை ஆக்கிரமித்து அதிக அளவில் புதர் செடிகள் முளைத்துள்ளன.

இதனால், எதிரே வரும் வாகனங்கள் பார்வைக்கு தெரியாத நிலையில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், ரோட்டோரத்தில், சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் பதுங்கியிருந்து தாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, ரோட்டோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us