sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைகளுக்கு நோட்டீஸ்

/

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைகளுக்கு நோட்டீஸ்

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைகளுக்கு நோட்டீஸ்

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைகளுக்கு நோட்டீஸ்


ADDED : செப் 11, 2024 02:58 AM

Google News

ADDED : செப் 11, 2024 02:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், சாலையோர ஆக்கிரமிப்புகளை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று அகற்ற உள்ளனர். இதற்காக, கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி பகுதியில் சாலையோரங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தனி நபர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டுமென, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரம் ஆக்கிரமித்துள்ள கடைக்காரர்களுக்கு, கடந்த, இரண்டு நாட்களாக நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, மீன்கரை ரோடு, பல்லடம் ரோடுகளில் உள் சாலையோர தற்காலிக ஆக்கிரமிப்புகளை, ஆக்கிரமிப்பாளர்களே அகற்றிக்கொள்ள வேண்டும் என, கால அவகாசம் வழங்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆக்கிரமிப்புகளை குறித்த நேரத்தில் அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை வாயிலாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். கோர்ட் உத்தரவுப்படி நாளை (இன்று) ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us