sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு; நிபந்தனைகள் விதித்தது மாநகராட்சி

/

ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு; நிபந்தனைகள் விதித்தது மாநகராட்சி

ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு; நிபந்தனைகள் விதித்தது மாநகராட்சி

ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு; நிபந்தனைகள் விதித்தது மாநகராட்சி


ADDED : பிப் 27, 2025 12:50 AM

Google News

ADDED : பிப் 27, 2025 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை பராமரிக்க, மாநகராட்சியில் இருந்து பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோவை - சத்தி ரோட்டில் செயல்படும் ஆம்னி பஸ் ஸ்டாண்ட், 3.68 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. அங்குள்ள வணிக வளாகத்துக்கு புது வர்ணம் பூசப்பட்டுள்ளது. கழிப்பறை புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

தாய்மார்கள் பாலுாட்டும் அறை அமைக்கப்பட்டிருக்கிறது. தார் ரோடு போடப்பட்டு, பஸ்கள் நிற்பதற்கு 'ரேக்' வரையப்பட்டு, மேற்கூரை போடப்பட்டுள்ளது. இவ்வளாகத்தை பராமரிக்க, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பஸ்கள் நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமம், ஏல முறையில் மாநகராட்சி வழங்குவது வழக்கம்.

இன்னும் ஏலம் கோரப்படாததால், மாநகராட்சி ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஒரு ஆம்னி பஸ்சுக்கு நுழைவு கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால், 150 ரூபாய் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

வெளியூர் செல்ல வரும் பயணிகளின் டூவீலர்கள் மற்றும் கார்கள் நிறுத்துவதற்கு வசதி செய்து தரப்படவில்லை. அதனால், மாற்று வாகனங்களில் வர வேண்டியிருக்கிறது.

இதற்கு தீர்வு காண, சத்தி ரோட்டில், மேம்பாலத்துக்கு கீழ் மையத்தடுப்பு பகுதியை இடித்து, இட வசதி ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினரிடம் இது குறித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

பஸ் ஸ்டாண்ட் அருகே ஆடு, மாடு அறுவைமனை செயல்படுகிறது. இதை நகரத்துக்கு வெளியே இடமாற்றம் செய்து விட்டு, அவ்விடத்தில் வாகனம் நிறுத்துமிடம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்கிற, கோரிக்கை எழுந்திருக்கிறது.

பின்பற்ற வேண்டிய விதிகள்

l பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பஸ்களை நிறுத்தி, தண்ணீர் ஊற்றி கழுவக் கூடாது. மீறீனால், முதல் தடவைக்கு ரூ.2,000, இரண்டாவது தடவைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். அதற்கு மேல் தவறும் பட்சத்தில், பஸ்கள் நுழைய தடை விதிக்கப்படும். l நடைபாதையில் கடையின் விளம்பர பலகை வைக்கக் கூடாது. பொருட்களை நடைபாதையில் வைத்திருக்கக் கூடாது.l ஆம்னி பஸ் ஸ்டாண்ட்டுக்கு உள்ளே, வெளியே அனுமதியின்றி கடைகள் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு, பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். l ஆம்னி பஸ்களை தவிர மற்ற வாகனங்கள் வரக்கூடாது இவ்வாறு, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us