/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமர் மோடி பிறந்த நாளில் பா.ஜ., உறுப்பினர் சேர்ப்பு தீவிரம்
/
பிரதமர் மோடி பிறந்த நாளில் பா.ஜ., உறுப்பினர் சேர்ப்பு தீவிரம்
பிரதமர் மோடி பிறந்த நாளில் பா.ஜ., உறுப்பினர் சேர்ப்பு தீவிரம்
பிரதமர் மோடி பிறந்த நாளில் பா.ஜ., உறுப்பினர் சேர்ப்பு தீவிரம்
ADDED : செப் 17, 2024 10:18 PM
அன்னுார் : பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, பா.ஜ., சார்பில் தீவிர உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நேற்று நடந்தது.
'பிரதமர் நரேந்திர மோடியின், 74வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைமை அறிவுறுத்தியது. அன்னுார் வடக்கு ஒன்றியம் சார்பில், அன்பு நகர், குமாரபாளையம், புதுப்பாளையம் பகுதியில் தீவிர உறுப்பினர் சேர்ப்பு நேற்று நடந்தது.
பா.ஜ., வடக்கு ஒன்றிய தலைவர் திருமூர்த்தி, பிரசார அணி மாவட்ட செயலாளர் நடராஜன், நிர்வாகிகள் கனகராஜ், நாகராஜ் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் கூறுகையில், 'கட்சியில் ஒருவர் தீவிர உறுப்பினராக வேண்டும் என்றால், தான் வசிக்கும் ஓட்டு சாவடி பகுதியில், 25 உறுப்பினர்களையும், சட்டசபை தொகுதிக்குள் மேலும் 25 உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும். தீவிர உறுப்பினரானால்தான் பொறுப்புக்கு வர முடியும்' என்றனர்.
அன்னூர் தெற்கு ஒன்றியத்தில், ஒன்றிய தலைவர் ரத்தினசாமி தலைமையில், தீவிர உறுப்பினர் சேர்ப்பு கணேசபுரத்தில் நடந்தது.