sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தரமற்ற வீடு கட்டியதால் இழப்பீடு வழங்க உத்தரவு

/

தரமற்ற வீடு கட்டியதால் இழப்பீடு வழங்க உத்தரவு

தரமற்ற வீடு கட்டியதால் இழப்பீடு வழங்க உத்தரவு

தரமற்ற வீடு கட்டியதால் இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : மார் 13, 2025 05:55 AM

Google News

ADDED : மார் 13, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டிய வீடு தரமற்றதாக இருந்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

சூலுார் அருகேயுள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். மத்திய பாதுகாப்பு படை வீரரான இவர், அதே பகுதியில், வீடு கட்டுவதற்காக, குமார் என்பவரின் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார்.

மொத்தம், 787 சதுர அடி வீட்டிற்கு, மனையுடன் சேர்த்து, 26 லட்சம் ரூபாய்க்கு, வங்கி கடன் பெற்று கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்தார். பணிகள் முடிந்த பிறகு, 2021, ஜன., 27ல் குடியேறினார்.

அப்போது, வீடு தரமற்றதாக இருந்தது தெரிய வந்தது. சுவரில் விரிசல் ஏற்பட்டதோடு, டைல்ஸ் தரையில் அமுங்கியது. இது குறித்து, கட்டுமான நிறுவன உரிமையாளர் குமாரிடம் கேட்ட போது, முறையான பதில் அளிக்கவில்லை.

இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'கட்டுமான நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு 3.80 லட்சம் ரூபாய் திருப்பி கொடுப்பதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us