sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பல்லடம் - பொள்ளாச்சி ரோடு பணி கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

/

பல்லடம் - பொள்ளாச்சி ரோடு பணி கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

பல்லடம் - பொள்ளாச்சி ரோடு பணி கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

பல்லடம் - பொள்ளாச்சி ரோடு பணி கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு


ADDED : ஆக 24, 2024 01:57 AM

Google News

ADDED : ஆக 24, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பல்லடம் - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சி நெடுஞ்சாலை கோட்டம், கிணத்துக்கடவு நெடுஞ்சாலை உட்கோட்டம், சுல்தான்பேட்டை பிரிவுக்கு உட்பட்ட பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில், காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரை மற்றும் அரசூர் பிரிவு முதல் வடசித்துார் பிரிவு வரை இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.

அதில், காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரையிலான பகுதியில் முதற்கட்ட தார் ரோடு போடுதல் பணி மற்றும் மையத்தடுப்பு அமைத்தல் பணி நிறைவடைந்துள்ளது.

அரசூர் பிரிவு முதல், வடசித்துார் பிரிவு வரையிலான சாலையில் வலதுபுறம் உள்ள பகுதி ஜல்லி கலவை பரப்புதல் பணி நிறைவடைந்துள்ளது. மையத்தடுப்பு அமைத்தல் பணி துவங்கப்பட உள்ளது.

இப்பணியை கோவை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். வேலைகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார். ஆய்வின் போது, பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் சரவணசெல்வம் மற்றும் கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை அதிகாரிகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us