sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

/

பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : மே 09, 2024 04:24 AM

Google News

ADDED : மே 09, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை - பழநிக்கு மடத்துக்குளம் வழியாகவும், கொழுமம் வழியாகவும் இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில், உடுமலை - கொழுமம் தடத்தில் கொமரலிங்கம் அமைந்துள்ளது.

இந்த நகரம் அப்பகுதியைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதனால், இவ்வழியாக போக்குவரத்து அதிக அளவில் இருந்து வருகிறது.

தினமும் 50க்கும் மேற்பட்ட பஸ்கள் செல்லும் இங்கு பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் பஸ்கள் நிறுத்த இடமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பொதுமக்களும், பயணியரும் அவதிப்படுகின்றனர். எனவே, கொமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதன் வாயிலாக, அங்கு போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.






      Dinamalar
      Follow us