/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒளிராத தெருவிளக்கு இருளில் மக்கள் அவதி
/
ஒளிராத தெருவிளக்கு இருளில் மக்கள் அவதி
ADDED : ஆக 01, 2024 12:45 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, வேலாயுதம்பாளையத்தில் தெருவிளக்குகள் சரிவர ஒளிராததால் மக்கள் அவதிப்படுகின்றனர். இருள் சூழ்ந்து விடுவதால், இரவு நேரத்தில் செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.
மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இரவு நேரத்தில் வெளியில் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில், பழுதடைந்த தெருவிளக்குகளை மக்கள் நலன் கருதி விரைவில் சரி செய்ய வேண்டும், என, வலியுறுத்துகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழை பெய்வதால் பணியாளர்கள் மின் கம்பத்தில் ஏறி பணி செய்ய முடியவில்லை. மழை குறைந்தவுடன், தெருவிளக்குகள் மாற்றப்படும்,' என்றனர்.