/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார்ப்பென்டர் இறப்பில் சந்தேகம்: மனைவியிடம் போலீஸ் விசாரணை
/
கார்ப்பென்டர் இறப்பில் சந்தேகம்: மனைவியிடம் போலீஸ் விசாரணை
கார்ப்பென்டர் இறப்பில் சந்தேகம்: மனைவியிடம் போலீஸ் விசாரணை
கார்ப்பென்டர் இறப்பில் சந்தேகம்: மனைவியிடம் போலீஸ் விசாரணை
ADDED : ஆக 17, 2024 12:16 AM
கோவை;அண்ணன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, தங்கை அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம், பேட்சி நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி,40. இவரது சகோதரர் சண்முகநாதன்,42, சவுரிபாளையம் மெயின் ரோடு, கருணாநிதி நகரில் வசித்து வந்தார். இவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு பாக்கியம் என்பவரை திருமணம் செய்தார். ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சவுரிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், 'கார்ப்பென்டர்' ஆக சண்முகநாதன் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை, 4:50 மணிக்கு மகாலட்சுமியை தொடர்பு கொண்ட கேசவன் என்பவர், சண்முகநாதன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி, கருணாநிதி நகர் சென்று பார்த்தபோது, இறந்து கிடந்த சண்முகநாதனின் கழுத்தின் முன்பக்கத்தில் காயம் இருந்துள்ளது. தனது அண்ணன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, பீளமேடு போலீசில் மகாலட்சுமி புகார் அளித்தார்.
போலீசார் சண்முகநாதனின் உடலை மீட்டனர். சந்தேக மரணம் என வழக்கு பதிந்து அவரது மனைவி பாக்கியத்திடம் விசாரித்து வருகின்றனர்.