/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு மேடைப் பேச்சுப் பயிற்சி
/
மாணவர்களுக்கு மேடைப் பேச்சுப் பயிற்சி
ADDED : ஆக 02, 2024 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : சரவணம்பட்டி, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை சார்பில், தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் மேடைப் பேச்சுப் பயிற்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக பட்டிமன்றம் பேச்சாளர் சாந்தாமணி மேடைப் பேச்சு குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். சமூக ஊடகங்கள் வரமா? சாபமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. தொடர்ந்து, தமிழ் மன்ற நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
கல்லுாரி நிர்வாகிகள் நித்யா, சந்தியா, முதல்வர் ராதிகா, தமிழ்த்துறைத் தலைவர் சதீஷ்மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.