/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனைமலை ரோட்டிலுள்ள ரயில்வே கேட் நாளை மூடல்
/
ஆனைமலை ரோட்டிலுள்ள ரயில்வே கேட் நாளை மூடல்
ADDED : ஜூன் 12, 2024 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, பராமரிப்பு பணிக்காக ஆனைமலை ரோடு ரயில்வே கேட் நாளை மூடப்படுகிறது.
பொள்ளாச்சி - பாலக்காடு ரயில் பாதை, ஆனைமலை சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு செல்வதற்கான வழித்தடத்தை கடந்து செல்கிறது. அவ்வகையில், அப்பகுதியில் ரயில்வே லெவல் கிராசிங் 7 எண் கொண்ட 'கேட்' அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிக்காக, நாளை (14ம் தேதி) காலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை மூடப்படுகிறது.
இதற்கு மாற்றாக, சுங்கம், சுப்பையாகவுண்டன்புதுார் மேம்பாலம், சுந்தரபுரி ரோடு வழியாக ஆனைமலை செல்லுமாறு, பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தகவலை, தெற்கு ரயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

