sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி.,யிடம் விசாரணை

/

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி.,யிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி.,யிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி.,யிடம் விசாரணை


ADDED : மார் 12, 2025 07:30 AM

Google News

ADDED : மார் 12, 2025 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரி வீர பெருமாளிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த, கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. அங்கு, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

இதில் தொடர்புடையதாக கனகராஜ், சயான், மனோஜ் உட்பட, 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கார் ஓட்டுனர் கனகராஜ், சயானின் மனைவி மற்றும் குழந்தை சாலை விபத்தில் உயிரிழந்தனர். கோடநாடு எஸ்டேட்டில் கணினி பணியாளராக பணியாற்றிய தினேஷ், தற்கொலை செய்து கொண்டார். கொள்ளை வழக்கு மற்றும் நான்கு பேரின் மரணம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். 240க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெ., தனி பாதுகாப்பு அதிகாரியாக (பி.எஸ்.ஓ.,) பல ஆண்டுகள் பணியாற்றி வந்த, ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வீரபெருமாளிடம் விசாரணை நடத்த, அவருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். காந்திபுரம் பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், நேற்று விசாரணைக்கு ஆஜரான அவரிடம், மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது.

அதன்பின் வீர பெருமாள் கூறுகையில், ''1991ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை, ஜெ.,வின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்தேன். அவரை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றவில்லை. வழக்கு தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு, எனக்கு தெரிந்த விஷயங்களை கூறியுள்ளேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us