sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரைஸ் புல்லிங் இரிடியம் ரூ. 5 லட்சம் மோசடி

/

ரைஸ் புல்லிங் இரிடியம் ரூ. 5 லட்சம் மோசடி

ரைஸ் புல்லிங் இரிடியம் ரூ. 5 லட்சம் மோசடி

ரைஸ் புல்லிங் இரிடியம் ரூ. 5 லட்சம் மோசடி


ADDED : ஆக 29, 2024 10:46 PM

Google News

ADDED : ஆக 29, 2024 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ரைஸ் புல்லிங் இரிடியம் விற்பனை செய்து பணம் தருவதாக கூறி மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வடவள்ளி, ஸ்ரீ சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 62. தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு சென்னை போரூரை சேர்ந்த சுவாமிநாதன், 52 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுவாமிநாதன், சென்னையில் ஸ்ரீ காமாட்சி கருணை இல்லம் நடத்தி வந்துள்ளார். மேலும், ஒரு நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், சுவாமிநாதன் தனது நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு முருகேசனிடம் கேட்டுள்ளார். இதையடுத்து இருவரும், கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் மருதமலையில் சந்தித்தனர். அப்போது, தன்னிடம் 'ரைஸ் புல்லில் இரிடியம்' இருப்பதாகவும், அதை இங்கிலாந்தில் உள்ள நிறுவனத்திற்கு ரூ.2.25 லட்சம் கோடிக்கு விற்பனை செய்யப்போவதாகவும் சுவாமிநாதன் தெரிவித்தார். மேலும், இரிடியம் விற்பதன் மூலம் 20 சதவீதம் லாபம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி திருப்பி தருவதாக ஆசை காட்டியுள்ளார். இதை நம்பிய முருகேசன் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். சுவாமிநாதன் பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. இதையடுத்து, முருகேசன் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us