/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனத்தில் 'ஓவர் லோடு' விபத்து ஏற்படும் அபாயம்
/
வாகனத்தில் 'ஓவர் லோடு' விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஜூலை 22, 2024 03:13 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வடசித்தூர் ரோட்டில் வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது.
கிணத்துக்கடவு, வடசித்தூர் வழித்தடத்தில் ஏராளமான லே - அவட் மற்றும் தனியார் நிறுவனங்கள் இருப்பதால், வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.
கிணத்துக்கடவு - காட்டம்பட்டி ரோடு மற்றும் வடசித்தூர் - நெகமம் ரோட்டில் டெம்போ போன்ற வாகனங்களில், தென்னை சார்ந்த பொருட்களை ஏற்றி செல்கின்றனர்.
இதில், வாகனத்தில் உரிய பாதுகாப்பு இன்றி, அதிகளவு பாரம் ஏற்றி செல்வதால், ரோட்டோரத்தில் உள்ள மரக்கிளையில் உரசி, மரக்கிளை உடைந்து விழுகிறது. இதனால் பைக் ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இதுமட்டும் இன்றி, வாகனத்தில் அதிக லோடு இருப்பதால், வாகனத்தை 'ஓவர் டேக்' செய்யவும், எதிரே வரும் வாகனங்கள் ரோட்டில் பயணிக்கவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி, சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றினால், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

