sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயம்

/

சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயம்

சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயம்

சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயம்


ADDED : மே 07, 2024 12:32 AM

Google News

ADDED : மே 07, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண் சாலையால் அவதி


சரவணம்பட்டி, வி.ஐ.பி., சென்ட்ரல் டவுன், ஜி.கே.எஸ்., நகரில், சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. தார் முழுவதும் பெயர்ந்து மண்ணாக காட்சியளிக்கிறது. மேடு, பள்ளங்களாக இருக்கும் சாலையால், வாகனஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மழைக்காலத்திற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜோதி, சரவணம்பட்டி.

மறுபுறம் கசிவு


தண்ணீர் பந்தல் முதல் இ.பி., அலுவலகம் செல்லும் சாலையில், குழாய் பதிப்பு பணிக்காக தோண்டப்பட சாலை,பணிமுடிந்தும், சீரமைக்கவில்லை. குழிகள் வெறும் மண் கொண்டு மூடப்பட்டதால், சில நாட்களிலேயேஇரண்டு அடிக்கு குழி ஏற்பட்டுவிட்டது. குழாய் இணைப்புகளில் தண்ணீர் கசிவும் உள்ளது.

- லோகநாதன், பீளமேடு.

கடும் துர்நாற்றம்


நீலிக்கோணாம்பாளையம், 59வது வார்டு, பழைய தபால் அலுவலகம்எதிரில், பல மாதங்களாக சாக்கடை கால்வாய் துார்வாரவில்லை. களைச்செடிகள், குப்பை நிரம்பியிருப்பதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

- சேகர், நீலிக்கோணாம்பாளையம்.

தினமும் விபத்து


ராமநாதபுரம், 63வது வார்டு, கன்னிகா பரமேஸ்வரி நகர், சாலை முழுவதும் பள்ளங்களாக காணப்படுகிறது. மோசமடைந்த சாலையால் தினமும் விபத்து ஏற்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளாக சாலை அமைத்து தரக் கோரியும் நடவடிக்கையில்லை.

- சுகன்யா, ராமநாதபுரம்.

திறந்தவெளியில் கழிவுநீர்


வடவள்ளி, தொண்டாமுத்துார் ரோடு, கருப்புசாமி முதலியார் வீதி சந்திப்பில், சிலர் வீடுகளிலிருந்து திறந்தவெளியில் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர். சாலையில் ஓடும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. வாகனங்கள் செல்லும் போது நடந்துசெல்பவர்கள் மீதுகழிவுநீர் தெறிக்கிறது.

- சண்முகம், பொம்மணாம்பாளையம்.

சாலையில் விழும் கிளைகள்


காந்திபார்க் அருகில், சலிவன் வீதியில், சாலையோரத்தில் மரம் ஓன்று காய்ந்து, பட்டுப்போன நிலையில் உள்ளது. சின்ன சின்ன கிளைகள் அடிக்கடி சாலையில் விழுகிறது. சாலையில் செல்வோர் மீது கிளைகள் விழக்கூடும். காய்ந்த மரத்தை பாதுகாப்பாகஅகற்ற வேண்டும்.

- சங்கர், காந்திபார்க்.

சீரமைக்கப்படாத ரோடு


மேட்டுப்பாளையம் ரோடு, ஹனுமன் கோவில் எதிரே, சீரமைப்பு பணிக்காக சாலை தோண்டப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு மேலாகியும்பணிகள் முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைந்து பணியை முடித்து, சாலையை சீரமைக்க வேண்டும்.

- ரங்கராஜ், திருச்சி ரோடு.

குப்பை தேக்கம்


தண்ணீர்பந்தல் முதல் கொடிசியா ரோடு, பொன்மணி கிரைண்டர் கம்பெனி அருகில் சாலையோரம்பெருமளவு குப்பை தேங்கிக்கிடக்கிறது. சுகதார சீர்கேடு ஏற்படுவதால் விரைந்து குப்பையைஅகற்ற வேண்டும்.

- தங்கவேல், கொடிசியா ரோடு.

சுகாதார சீர்கேடு


காந்திபுரம், எட்டாவது வீதியில், சுகாதாரப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. பல வாரங்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாமல், தேங்கி நிற்கிறது. சாலையோரம் மலை போல குப்பையும் தேங்கியுள்ளது. சுகாதார சீர்கேட்டால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

- சண்முகவேல், தொட்டிபாளையம்.






      Dinamalar
      Follow us