/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு, யு.ஜி.டி., பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
/
ரோடு, யு.ஜி.டி., பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : மே 01, 2024 11:42 PM
கோவை : மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ரோடு, யு.ஜி.டி., பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
மாநகராட்சி, 39வது வார்டு ராவீஸ் அவென்யூ, 16வது வார்டு சாஜ் கார்டன் வீதி ஆகிய பகுதிகளில் புதிய தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ரோட்டின் தரத்தை ஆய்வு செய்தார்.
முன்னதாக, 36வது வார்டு வடவள்ளி, நியூ தில்லை நகரில் நடந்துவரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளையும்(யு.ஜி.டி.,) ஆய்வு செய்த அவர், விரைந்து பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.
மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி கமிஷனர் சந்தியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

