sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

என்ன, ஏது என்று தெரியாமலே விண்ணப்பங்கள் நிராகரிப்பு: புலம்பும் சாலையோர வியாபாரிகள்

/

என்ன, ஏது என்று தெரியாமலே விண்ணப்பங்கள் நிராகரிப்பு: புலம்பும் சாலையோர வியாபாரிகள்

என்ன, ஏது என்று தெரியாமலே விண்ணப்பங்கள் நிராகரிப்பு: புலம்பும் சாலையோர வியாபாரிகள்

என்ன, ஏது என்று தெரியாமலே விண்ணப்பங்கள் நிராகரிப்பு: புலம்பும் சாலையோர வியாபாரிகள்


ADDED : ஜூன் 01, 2024 11:28 PM

Google News

ADDED : ஜூன் 01, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:சாலையோர வியாபாரிகள் பலரது விண்ணப்பங்கள், தகுந்தகாரணமின்றி திருப்பி அனுப்பப்படுவதால், பொருளாதார ரீதியாக அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசின் நோக்கமும் வீணாகிறது.

கோவை மாநகரில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு, வங்கிக் கடன் உள்ளிட்ட உதவிகள் கிடைக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, பிரதம மந்திரியின் 'ஆத்ம நிர்பார்' திட்டத்தில், பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, வியாபார சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா சமயத்தில் முடங்கிய தொழில்கள், மீண்டும் புத்துயிர் பெறவும், வாழ்வாதாரம் மேம்படவும் வழங்கப்பட்ட, வங்கிக்கடன் பெரிதும் கைகொடுத்தது.

கடந்தாண்டு மாநகராட்சி பகுதியில், 21 ஆயிரத்து, 619 சாலையோர வியாபாரிகளுக்கு, வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், இலக்கையும் தாண்டி, 26 ஆயிரத்து, 804 நபர்கள் கண்டறியப்பட்டு கடன் உதவிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில், முதல் தவணையாக நபருக்கு ரூ.10 ஆயிரம் வீதம், 18 ஆயிரத்து, 538 பேருக்கு கடன் வழங்கப்பட்டது.

இரண்டாம் தவணையாக ரூ.20 ஆயிரம் வீதம், 5,230 பேருக்கும், மூன்றாம் தவணையாக ரூ.50 ஆயிரம் வீதம், 876 பேருக்கும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, புதிதாக தொழில் ஆரம்பிக்கும் வியாபாரிகளும், கடன் உதவி கேட்டு விண்ணப்பிப்பது அதிகரித்துள்ளது.

நோக்கம் வீண்!


'வியாபாரிகள் மொபைல் போன் அழைப்பை ஏற்கவில்லை, அழைப்பு விடுத்தும் உரிய நேரத்துக்கு வரவில்லை போன்ற காரணங்களை, வங்கிகள் முன்வைப்பதாக, வியாபாரிகள் புலம்புகின்றனர். இதனால், மத்திய அரசின் நோக்கமே வீணாகிறது.

எனவே, மாநகராட்சி நிர்வாகம் வங்கி உயர் அதிகாரிகளுடன் பேசி, கடனுக்காக காத்திருக்கும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டியது அவசியம்.

3,000 பேர் காத்திருப்பு

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கடந்தாண்டு நவ., மாதம், 21 ஆயிரத்து, 446 பேருக்கு முதல் தவணை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் அதிகரித்ததையடுத்து, 30 ஆயிரத்து, 43 ஆக இலக்கு அதிகரிக்கப்பட்டது. இதுவரை, 24 ஆயிரத்து, 900 பேர் கடன் உதவி பெற்றுள்ளனர். அதே சமயம், 3,000க்கும் அதிகமானோரின் விண்ணப்பங்கள், தகுந்த காரணமின்றி திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இவர்களது விண்ணப்பங்களை, மறுபரிசீலனை செய்து வங்கிகள் கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us