sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நடமாடும் கால்நடை மருந்தக பிரிவு வாகனத்துக்கு வழித்தடம் தயாரிப்பு

/

நடமாடும் கால்நடை மருந்தக பிரிவு வாகனத்துக்கு வழித்தடம் தயாரிப்பு

நடமாடும் கால்நடை மருந்தக பிரிவு வாகனத்துக்கு வழித்தடம் தயாரிப்பு

நடமாடும் கால்நடை மருந்தக பிரிவு வாகனத்துக்கு வழித்தடம் தயாரிப்பு


ADDED : ஆக 01, 2024 10:31 PM

Google News

ADDED : ஆக 01, 2024 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : தமிழகத்தில், கால்நடைத் துறை சார்பில் நடமாடும் கால்நடை மருந்தக பிரிவு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, மாவட்டந்தோறும், ஒரு லட்சம் கால்நடைகளுக்கு ஒரு நடமாடும் கால்நடை மருந்தக வாகனம் வீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு வாகனத்திலும், பெரிய மற்றும் சிறிய விலங்குகளுக்கான அறுவை சிகிச்சை பெட்டிகள், ஆட்டோ கிளேவ், பயோமெடிக்கல் கழிவு சேகரிப்பு தொட்டிகள், எல்.இ.டி., பிளட் லைட்கள், பவர் ஜெனரேட்டர், கிரையோகன் மற்றும் செயற்கை கருவூட்டல் கருவிகள் என, பல்வேறு வசதிகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, மாவட்டந்தோறும், இந்த வாகனங்கள் சென்று திரும்பும் வழித்தடம் குறித்த விபரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கால்நடை மருத்துவமனைகள் இல்லாத கிராமங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனையில் இருந்து தொலைதுாரங்களில் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வழித்தடம் தயாரிக்கப்படுகிறது.

கால்நடைத்துறையினர் கூறுகையில் 'நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவில் பணிபுரியும் டாக்டர்களை, அரசே தீர்மானிக்கும். தற்போது, அந்த வாகனங்கள் சென்று திரும்பும் கிராமங்கள் குறித்த விபரம், உட்கோட்ட அளவில் தயாரிக்கப்பட்டு, மண்டல அலுவலகம் வாயிலாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us