sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீடு மற்றும் தோட்டங்களில் தொடர் திருட்டு; ஒருவர் கைது

/

வீடு மற்றும் தோட்டங்களில் தொடர் திருட்டு; ஒருவர் கைது

வீடு மற்றும் தோட்டங்களில் தொடர் திருட்டு; ஒருவர் கைது

வீடு மற்றும் தோட்டங்களில் தொடர் திருட்டு; ஒருவர் கைது


ADDED : செப் 02, 2024 01:15 AM

Google News

ADDED : செப் 02, 2024 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் சுற்று பகுதியில் வீடுகளில் நகையும், தோட்டங்களில் மின் மோட்டார் ஒயர்களையும் திருடி வந்த நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொண்டாமுத்தூர், வாய்க்கால் வழிச்சாலையில் உள்ள தோட்டத்து வீட்டில், ராமாத்தாள்,79 என்பவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ராமாத்தாளின் வீட்டில் இருந்த, சுமார் 60 பவுன் நகை மற்றும் 20,000 ரூபாய் பணம் மாயமானது.

ராமாத்தாள் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ராமாத்தாளின் வீட்டில் வாடகைக்கு இருந்த சந்தானம்,26 என்பவர், ராமாத்தாள் குடும்பத்துடன் வெளியில் சென்ற போது, வீட்டின் பின் பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்து, பணம் மற்றும் நகையை திருடியது தெரிய வந்தது.

தொண்டாமுத்தூர் போலீசார், சந்தானத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், ராமாத்தாள் வீடு மற்றும் ஆலாந்துறையில் உள்ள வீடு என, இரண்டு வீடுகளில் நகை திருடியதும், கலிக்கநாயக்கன்பாளையம், கீழ் சித்திரைச்சாவடி பகுதிகளில் உள்ள தோட்டங்களில் மின் மோட்டார் ஒயரை திருடியதும் தெரியவந்தது. திருடிய நகைகளை, காந்தி புரத்தில் உள்ள நகைக்கடையில் விற்று, ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார். 33 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us