/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொஞ்சம் டீ, கொஞ்சம் பிஸ்கட்! பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்
/
கொஞ்சம் டீ, கொஞ்சம் பிஸ்கட்! பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்
கொஞ்சம் டீ, கொஞ்சம் பிஸ்கட்! பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்
கொஞ்சம் டீ, கொஞ்சம் பிஸ்கட்! பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்
ADDED : ஆக 24, 2024 11:38 PM

இப்போது அனைத்து பள்ளிகளிலும், ஆரம்ப வகுப்புகளில் இரண்டும், அதற்கு மேல் வகுப்புகளில், ஒரு ஸ்நாக்ஸ் இடைவேளையும் உள்ளது.
இந்த இடைவேளையில், பெரும்பாலான குழந்தைகள் கொண்டு வருவது பிஸ்கட் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளாகவே உள்ளது.
ஒரு சில பள்ளிகளில் மட்டுமே, ஆரோக்கியமற்ற உணவுகள் கொண்டுவருவதை தடை செய்து அதை கண்காணிக்கின்றனர். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இதை கண்டுகொள்வதில்லை. பள்ளியை இதில் குறைகூறுவதை காட்டிலும், பெற்றோரே இதில் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இதுகுறித்து, ஆசிரியர் உஷா கூறியதாவது:
ஆரம்பம் முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களை நான் கையாளுகின்றேன். ஒவ்வொரு வகுப்புகளிலும் மாணவர்களின் மதிய உணவு என்ன என்பதையும், ஸ்நாக்ஸ் என்ன என்பதையும் தவறாமல் கேட்பேன், சில நேரங்களில் பார்பேன். இதில், பிஸ்கட், குக்கீஸ், சாக்லேட், கேக் , முறுக்கு போன்றவை தான் 80 சதவீத மாணவர்கள் கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளி வகுப்பறை உரையாடலின் போது, காலையில் எழுந்ததும் டீ, ஹார்லிக்ஸ் போன்றவற்றுடன் பிஸ்கட் உண்ணும் பழக்கத்தை பெரும்பாலான மாணவர்கள் வைத்துள்ளனர். அதிலும், ஒரு பிஸ்கட் பேக்கட் ஒருவக்கு என கணக்கு வேறு. இதை பார்க்கும் போது, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் பெற்றோரின் விழிப்புணர்வு வேதனை அளிக்கிறது.
அதிகப்படியான சர்க்கரை, சிந்தடிக் எடிபல் புட் கலர், மைதா, ரீபண்ட் ஆயில் போன்ற உடம்புக்கு முற்றிலும் கேடுவிளைவிக்கும் பொருட்களையே இதுபோன்ற உணவுகளில் பயன்படுத்துகின்றனர். விளம்பரங்களில், பால், நெய், பாதாம், முந்திரி என கூறுவது முற்றிலும் மார்க்கெட்டிங் யுத்தி என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சுண்டல், பச்சைபயறு, பழங்கள், காரட் போன்றவற்றை ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். எப்பாவது ஒரு முறை பிஸ்கட் போன்றவற்றை கொடுக்கலாம். காலையில் எழுந்தவுடன் பிஸ்கட், பள்ளி ஸ்நாக்ஸ் டப்பாவிலும் பிஸ்கட் வைத்து குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்கையை பெற்றோரே கெடுத்துவிடவேண்டம். பல நோய்களுக்கு இதுபோன்ற ஸ்நாக்ஸ் பழக்கமே காரணம் என்பதை தொடர்ந்து பெற்றோரிடம் கூறிவருகிறோம். இதற்காக, ஒரு சில பெற்றோர் ஆசிரியரிடம் கோபித்துக்கொள்வது தான் வேதனையின் உச்சம். முடிந்தவரை ஸ்நாக்ஸ் வீடுகளில் செய்தவையாக இருக்கவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

