/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரை கோவையில் காணலாம்
/
ஸ்ரீவில்லிபுத்துாரை கோவையில் காணலாம்
ADDED : ஆக 03, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடி என்றாலே ஆண்டாள் தான் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர். 12 ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் அவதரித்ததலமாக அமைந்த சிறப்பு, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மட்டுமே உண்டு. அதுவும் இரண்டு ஆழ்வார்களும் தந்தையும் மகளுமாக இருப்பது அதைவிட சிறப்பு.
ஒவ்வொரு ஆண்டும், ஆண்டாளின் அவதார உற்சவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மோற்சவமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா வரும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதே போன்ற உற்சவம், கோவை சலிவன் வீதி வேணுகோபால சுவாமி கோவிலிலும், பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி கோவிலிலும் நடைபெறும்.