/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புனித அந்தோணியார் தேர்த்திருவிழா கொடியேற்றம்
/
புனித அந்தோணியார் தேர்த்திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜூன் 10, 2024 11:47 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத் தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய தேர் திருவிழா கொடியேற்றம், நேற்று முன் தினம் காலை, 8:15 மணிக்கு திருப்பலியுடன் துவங்கியது.
திருப்பலி நிறைவடைந்த உடன், 10:00 மணிக்கு கோவை மறை மாவட்ட பொருளாளர் ஆண்டனி செல்வராஜ், புனித அந்தோணியார் உருவம் பதித்த கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இன்றிலிருந்து, 14ம் தேதி வரை பால் வின்சென்ட், சிஜீ, லூயிஸ் ராஜ், சேவியர் கிளாடிஸ் ஆகிய பாதிரியார்கள் திருப்பலியை நிறைவேற்றி மறைவுரை ஆற்ற உள்ளனர்.
வருகிற 16ம் தேதி தேர் திருவிழாவை முன்னிட்டு காலை 8:15 மணிக்கு திருவிழா சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலியை ஆயர் செயலர் பாதிரியார் ஜெரோம் நிறைவேற்ற உள்ளார். மாலை, 6:00 மணிக்கு பாதிரியார் ஜோசப் சுதாகர் திருப்பலியை நிறைவேற்றி, ஆடம்பரத் தேர் பவணியை துவக்கி வைக்கிறார்.
விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ், அருள் சகோதரிகள், அன்பியத்தினர், பங்கு மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

