sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அதிநவீன விரைவுரை பிடிப்பு தளம் ராமகிருஷ்ணா கல்லுாரியில் துவக்கம்

/

அதிநவீன விரைவுரை பிடிப்பு தளம் ராமகிருஷ்ணா கல்லுாரியில் துவக்கம்

அதிநவீன விரைவுரை பிடிப்பு தளம் ராமகிருஷ்ணா கல்லுாரியில் துவக்கம்

அதிநவீன விரைவுரை பிடிப்பு தளம் ராமகிருஷ்ணா கல்லுாரியில் துவக்கம்


ADDED : ஜூலை 09, 2024 11:47 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;துடியலுார், வட்டமலை பாளையம் ஸ்ரீ ராம கிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில், அதிநவீன விரிவுரை பிடிப்பு தளத்தின் துவக்க விழா நடந்தது.

எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ''அதிநவீன விரிவுரைப் பிடிப்பு தளத்தின் முதன்மை நோக்கம், ஆசிரியர்களின் விரிவுரைகளைப் பதிவு செய்து, அவர்களின் கற்பித்தல் செயல்முறையை பின்னுாட்டத்துடன் மேம்படுத்துவதாகும்.

ஆன்லைன் மற்றும் அவுட்ரீச் நிகழ்ச்சிகளின் பதிவுகளை எளிதாக்குவதன் மூலம், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும்,'' என்றார்.

கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் தொழில் முனைவோர் மாதம்பட்டி ரங்கராஜ், டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மராத்தானை வென்ற நவுஷீன் பானு சந்த், லவ்லி டிரெயில்சின் நிறுவனர் இஷாக் முகமது அப்பாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவிற்கு, கல்வித்துறை இயக்குனர் அலமேலு, முதல்வர் (பொறுப்பு) கருப்புசாமி மற்றும் பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us