/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக பாசன வேளாண்மை திட்டம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
/
தமிழக பாசன வேளாண்மை திட்டம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
தமிழக பாசன வேளாண்மை திட்டம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
தமிழக பாசன வேளாண்மை திட்டம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
ADDED : ஆக 12, 2024 01:28 AM
ஆனைமலை:'ஆனைமலையில், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது,' என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்தார்.
ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:
ஆனைமலை வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில், நடப்பாண்டில் தமிழக பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தோட்டக்கலைத்துறை வாயிலாக, நீர் பாசனத்தில் புதிய திட்ட உத்திகளை செலுத்தி, விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவும் புதிய பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தி, வேளாண்மையை நவீனப்படுத்திக்கொண்டுள்ளது.
இத்திட்டத்தில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு கிராமங்களான பெரியபோது, ஒடையகுளம், மார்ச்சநாயக்கன்பாளையம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், காளியாபுரம், கோட்டூர், சோமந்துறை மற்றும் தென்சங்கம்பாளையம் விவசாயிகள் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
இக்கிராமங்களில் பிரதான பயிரான தென்னையில், ஊடுபயிரான திசுவாழை, ஜாதிக்காய் வழங்கப்பட உள்ளது.
நிலப்போர்வை போன்ற உயர் தொழில்நுட்பத்தின் வாயிலாக, நீர் மேலாண்மை மற்றும் கூலி மேலாண்மை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கச் செய்கிறது.
இத்திட்டத்திற்கு இலக்காக திசுவாழை, 150 ெஹக்டேரும், 200 ெஹக்டர் ஜாதிக்காய் நாற்றுகளும், நிலப்போர்வை, 5 ெஹக்டேர் பெறப்பட்டு விவசாயிகளுக்கு முன்பதிவு அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ள திட்டத்தில் பயன்பெற உள்ள விவசாயிகள் சிட்டா அடங்கல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல், உரிமைச்சான்று, நிலவரைபடம் மற்றும் வங்கி புத்தகநகல் ஆகியவற்றுடன் தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
மேலும், உழவன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.