sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணிகள்: பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டியில் அசத்தல்

/

அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணிகள்: பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டியில் அசத்தல்

அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணிகள்: பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டியில் அசத்தல்

அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணிகள்: பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டியில் அசத்தல்


ADDED : ஆக 22, 2024 11:38 PM

Google News

ADDED : ஆக 22, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டிகளில் கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான, 20வது அனைத்திந்திய பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டத்தின் சார்பில் நேற்று முன்தினம் துவங்கியது.

நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் இன்று வரை கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிஸ் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறுகின்றன.

இதில், நாடு முழுவதும் இருந்து, 400 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு தொலைதொடர்பு வட்ட தலைமை பொது மேலாளர் பனாவத்து வெங்கடேஷ்வரலு, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

முதல் நாளில் தமிழகம் மற்றும் இமாச்சலபிரதேச அணிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி விறுவிறுப்பாக இருந்தது. தமிழ்நாடு அணி வீரர்கள் துவக்கம் முதலே புள்ளிகளை குவித்து எதிரணியினரை திணறடித்தனர்.

தமிழ்நாடு அணி, 76-49 என்ற புள்ளிக்கணக்கில் இமாச்சலபிரதேச அணியை தோற்கடித்தது.

அதேபோல், கேரள அணி மகாராஷ்டிர அணியை, 58-18 என்ற புள்ளிக்கணக்கிலும், மேற்குவங்க அணி சத்தீஸ்கர் அணியை, 60-43 என்ற புள்ளி கணக்கிலும் வென்றன. தொடர்ந்து நடந்த போட்டியில், தமிழ்நாடு அணி, 69-48 என்ற புள்ளி கணக்கில் ஒரிசா அணியை தோற்கடித்தது.

நேற்றைய போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேற்றியது. கைப்பந்து போட்டியில் கால் இறுதியில் விளையாடிய தமிழ்நாடு அணி, அசாம் அணியை, 2-0 என்ற 'செட்' கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

கர்நாடக அணி உத்திரபிரதேச மேற்கு அணியை, 2-0 என்ற 'செட்' கணக்கிலும், ராஜஸ்தான் அணி உத்தரகாண்ட் அணியை, 2-0 என்ற செட் கணக்கிலும், இமாச்சலபிரதேசம் அணி பீகார் அணியை, 2-1 என்ற செட் கணக்கிலும் வென்று அரையிறுதியிக்கு தகுதி பெற்றன.






      Dinamalar
      Follow us