/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணிகள்: பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டியில் அசத்தல்
/
அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணிகள்: பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டியில் அசத்தல்
அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணிகள்: பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டியில் அசத்தல்
அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணிகள்: பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டியில் அசத்தல்
ADDED : ஆக 22, 2024 11:38 PM

கோவை:பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டிகளில் கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான, 20வது அனைத்திந்திய பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டத்தின் சார்பில் நேற்று முன்தினம் துவங்கியது.
நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் இன்று வரை கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிஸ் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறுகின்றன.
இதில், நாடு முழுவதும் இருந்து, 400 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு தொலைதொடர்பு வட்ட தலைமை பொது மேலாளர் பனாவத்து வெங்கடேஷ்வரலு, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
முதல் நாளில் தமிழகம் மற்றும் இமாச்சலபிரதேச அணிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி விறுவிறுப்பாக இருந்தது. தமிழ்நாடு அணி வீரர்கள் துவக்கம் முதலே புள்ளிகளை குவித்து எதிரணியினரை திணறடித்தனர்.
தமிழ்நாடு அணி, 76-49 என்ற புள்ளிக்கணக்கில் இமாச்சலபிரதேச அணியை தோற்கடித்தது.
அதேபோல், கேரள அணி மகாராஷ்டிர அணியை, 58-18 என்ற புள்ளிக்கணக்கிலும், மேற்குவங்க அணி சத்தீஸ்கர் அணியை, 60-43 என்ற புள்ளி கணக்கிலும் வென்றன. தொடர்ந்து நடந்த போட்டியில், தமிழ்நாடு அணி, 69-48 என்ற புள்ளி கணக்கில் ஒரிசா அணியை தோற்கடித்தது.
நேற்றைய போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேற்றியது. கைப்பந்து போட்டியில் கால் இறுதியில் விளையாடிய தமிழ்நாடு அணி, அசாம் அணியை, 2-0 என்ற 'செட்' கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
கர்நாடக அணி உத்திரபிரதேச மேற்கு அணியை, 2-0 என்ற 'செட்' கணக்கிலும், ராஜஸ்தான் அணி உத்தரகாண்ட் அணியை, 2-0 என்ற செட் கணக்கிலும், இமாச்சலபிரதேசம் அணி பீகார் அணியை, 2-1 என்ற செட் கணக்கிலும் வென்று அரையிறுதியிக்கு தகுதி பெற்றன.

