/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் பாடத் தேர்வு மிக எளிது பிளஸ் 1 மாணவர்கள் மகிழ்ச்சி
/
தமிழ் பாடத் தேர்வு மிக எளிது பிளஸ் 1 மாணவர்கள் மகிழ்ச்சி
தமிழ் பாடத் தேர்வு மிக எளிது பிளஸ் 1 மாணவர்கள் மகிழ்ச்சி
தமிழ் பாடத் தேர்வு மிக எளிது பிளஸ் 1 மாணவர்கள் மகிழ்ச்சி
ADDED : மார் 05, 2025 10:35 PM

அன்னுார், ;பிளஸ் 1 தமிழ் பாடத் தேர்வு மிக எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. முதல் நாளன்று, தமிழ் பாட தேர்வு நடந்தது.
அன்னூர் வட்டாரத்தில், அன்னூர் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி கே. ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் தேர்வு மையங்கள் செயல்பட்டன.
இப்பள்ளிகளில் நேற்று தமிழ் பாடத் தேர்வு நடந்தது.
மிக எளிதாக இருந்தது
ஜனனிகா, அரசு மேல்நிலைப்பள்ளி,அன்னுார்:
ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், நான்கு மதிப்பெண், ஆறு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் எளிதாக இருந்தன. 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதிக மதிப்பெண் பெற முடியும். எளிதாக தேர்ச்சி பெற முடியும்.
ஒரு மதிப்பெண் கேள்வி கடினம்
சந்தியா, அரசு மேல்நிலைப்பள்ளி. ஆனையூர்:
இரண்டு, மூன்று, நான்கு, ஆறு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டும் கடினமாக இருந்தது.
எளிதில் தேர்ச்சி பெறலாம்
ஜெகதீஷ், குமாரபாளையம்:
அனைத்து கேள்விகளும் எளிதாக பதில் எழுதும்படி இருந்தன. எளிதில் தேர்ச்சி பெறலாம்.
ஆசிரியர் தெரிவித்த பல கேள்விகள் கேள்வித்தாளில் வந்திருந்தன.