ADDED : ஜூலை 13, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
கோவை: மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உதவி திட்ட அமைப்பாளராக பணியாற்றி வந்தவர் தீபக். வரிவசூல், குடிநீர் கட்டணம் போன்ற சேவைகளுக்காக இயங்கும் UTIS மென்பொருளை பராமரித்து வந்தார்.
த.வெ.க. ஆட்சிக்கு வந்ததும் தீபக் வடக்கு மண்டலத்தின், உதவி தொழில்நுட்ப உதவியாளராக மாற்றப்பட்டார். அதன் பிறகும் அவர், UTIS மென்பொருளை பயன்படுத்தி தன்னிச்சையாக சொத்து வரி பெயர் மாற்றம், கட்டட அனுமதி பதிவுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அவரை சஸ்பெண்ட் செய்து, மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா உத்தரவிட்டுள்ளார்.
