/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உற்பத்தி திறன் மேம்படுவதே மனித வளத்துக்கான அடையாளம்
/
உற்பத்தி திறன் மேம்படுவதே மனித வளத்துக்கான அடையாளம்
உற்பத்தி திறன் மேம்படுவதே மனித வளத்துக்கான அடையாளம்
உற்பத்தி திறன் மேம்படுவதே மனித வளத்துக்கான அடையாளம்
ADDED : ஏப் 30, 2024 11:18 PM
- நமது நிருபர் -
'நிப்ட்-டீ' கல்லுாரி ஆராய்ச்சித்துறை, 'நபார்டு' வங்கியுடன் இணைந்து, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்கான, 'நாப்ஸ்கில்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், கடந்த 45 நாட்களாக, மேம்பட்ட ஆடை உற்பத்தி என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
நவீன மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட ஆடை வடிவமைப்பு, உற்பத்தி வழிமுறைகள், செயல் நுணுக்கங்கள் கற்றுத்தரப்பட்டது. தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவடைந்து, சான்றிதழ் வழங்கும் விழா, 'நிப்ட்-டீ' கல்லுாரி அடல் இன்குபேஷன் மையத்தில் நடந்தது.
கல்லுாரியின் ஆராய்ச்சி மற்றும் இன்குபேஷன் மைய கமிட்டி தலைவர் செந்தில் குமார், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் (வளர்ச்சி) அசோக் குமார், மாவட்ட தொழில் மைய மேலாளர் கார்த்திகைவாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அடல் இன்குபேஷன் மைய தலைமை செயல்பாட்டு அதிகாரி அருள்செல்வன் வரவேற்றார். இன்குபேஷன் மைய கமிட்டி தலைவர் செந்தில் குமார் பேசுகையில், ''ஆயத்த ஆடை நிறுவனங்களில், ஏராளமான வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன. 'நிப்ட் -டீ' கல்லுாரியில் மாணவர்களுக்கு, செயல்முறை பயிற்சி அளிக்கப்படுவதால், உடனடியாக வேலைவாய்ப்பில் இணைய முடியும். இவ்வாறான பயிற்சிகள் வாயிலாக, ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு திறமையான மனித வளத்தை உருவாக்க முடியும்,'' என்றார்.
பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்கள் மற்றும் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.