sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெண் மீது மிளகாய் பொடி தூவி நகை பறித்தவர் கைது

/

பெண் மீது மிளகாய் பொடி தூவி நகை பறித்தவர் கைது

பெண் மீது மிளகாய் பொடி தூவி நகை பறித்தவர் கைது

பெண் மீது மிளகாய் பொடி தூவி நகை பறித்தவர் கைது


ADDED : ஆக 13, 2024 01:22 AM

Google News

ADDED : ஆக 13, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பெத்திக்குட்டையை சேர்ந்தவர் வசந்தா, 49. டெய்லர். இவரது கணவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.

கடந்த 9ம் தேதி, வசந்தா வீட்டில் துணி தைத்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், முகத்தை வெள்ளை துணியால் மூடிக்கொண்டு, வீட்டிற்குள் நுழைந்து, வசந்தா மீது மிளகாய் பொடியை தூவினார். பின் அவரது கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்தார். உடனே வசந்தா செயினை பிடிக்க, செயின் துண்டித்து, பாதி செயின் வசந்தாவின் கையில் மாட்டிக்கொண்டது. ஆனாலும் 12 கிராம் தங்க நகையை மர்ம நபர் பறித்துக் கொண்டு தப்பி விட்டார்.

இதுகுறித்து, வசந்தா அளித்த புகாரின் பேரில் சிறுமுகை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வந்தனர். விசாரணையில், செயினை பறித்து சென்றது, காரமடையை சேர்ந்த சர்தார், 41, என தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன் தினம், அவரை சிறுமுகை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us