sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோர்ட்டுக்கு அழைத்து செல்லாததால் காயம் ஏற்படுத்தி கைதி அட்டகாசம்

/

கோர்ட்டுக்கு அழைத்து செல்லாததால் காயம் ஏற்படுத்தி கைதி அட்டகாசம்

கோர்ட்டுக்கு அழைத்து செல்லாததால் காயம் ஏற்படுத்தி கைதி அட்டகாசம்

கோர்ட்டுக்கு அழைத்து செல்லாததால் காயம் ஏற்படுத்தி கைதி அட்டகாசம்


ADDED : ஜூலை 03, 2024 09:52 PM

Google News

ADDED : ஜூலை 03, 2024 09:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோர்ட்டுக்கு அழைத்து செல்லாத ஆத்திரத்தில், பல்பை உடைத்து உடலில் காயம் ஏற்படுத்திய சிறைவாசி மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

எண்ணுாரை சேர்ந்தவர் தனசேகரன், 41. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், கடலுார் சிறையில் இருந்து கடந்த ஏப்., மாதம், கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து, கடலுார் கோர்ட்டுக்கு கோவையில் இருந்து, போலீசார் அடிக்கடி அழைத்துசென்று வந்துள்ளனர்.

நேற்று முன்தினம், கோர்ட்டுக்கு அழைத்து செல்லாமல் சிறையில் இருந்தவாறு, 'வீடியோ' அழைப்பு வாயிலாக தனசேகரனிடம் விசாரணை நடந்துள்ளது.

இதையடுத்து, கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லாத ஆத்திரத்தில், எலக்ட்ரிக் பல்பை உடைத்து தனது நெஞ்சு, கழுத்து, வயிற்றில் தனசேகரன் காயம் ஏற்படுத்தியுள்ளார்.

பணியில் இருந்த ஜெயில் வார்டனிடம், பல்பை காட்டி மிரட்டியதுடன், பணிக்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளார். ஜெயிலர் சிவராசன் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us