/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் போலீசார் கண்டுகொள்ளாததால் சிக்கல்
/
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் போலீசார் கண்டுகொள்ளாததால் சிக்கல்
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் போலீசார் கண்டுகொள்ளாததால் சிக்கல்
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் போலீசார் கண்டுகொள்ளாததால் சிக்கல்
ADDED : ஆக 19, 2024 01:30 AM

வால்பாறை:வால்பாறை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
வால்பாறை நகரின் மத்தியில், பொள்ளாச்சி பிரதான சாலையில் அதிக அளவில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில், வால்பாறையில் போக்குவரத்துக்கு இடையூறாக, நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை போஸ்ட் ஆபீஸ் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை சாலையோரங்களில் விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
சுற்றுலா வாகனங்கள் நிறுத்த தனி 'பார்க்கிங்' வசதி இல்லாததால், நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகவே உள்ளது. வால்பாறையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தயக்கம் காட்டுவதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறையில், ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படும் நிலையில், ஆக்கிரமிப்பு கடைகளும் அதிக அளவில் இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்களும் நிம்மதியாக ரோட்டில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்த வேண்டும். நகராட்சி சார்பில் கார் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக்கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.