sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உள்வாங்குது சாலை... எப்போ வரும் நல்ல வேளை? கலெக்டர் நடவடிக்கைக்கு காத்திருப்பு

/

உள்வாங்குது சாலை... எப்போ வரும் நல்ல வேளை? கலெக்டர் நடவடிக்கைக்கு காத்திருப்பு

உள்வாங்குது சாலை... எப்போ வரும் நல்ல வேளை? கலெக்டர் நடவடிக்கைக்கு காத்திருப்பு

உள்வாங்குது சாலை... எப்போ வரும் நல்ல வேளை? கலெக்டர் நடவடிக்கைக்கு காத்திருப்பு


ADDED : ஆக 06, 2024 07:10 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: அஜ்ஜனூர் பேரூர் ரோட்டில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால், ரோடு பெரும் குழியாக உள்வாங்கியுள்ளது.

மாநகராட்சி 24 மணி நேர குடிநீர் திட்டத்துக்காக, அஜ்ஜனூர் சாலை வழியாக குழி தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இந்த குழிகள் சரியாக மூடப்படவே இல்லை. வேடப்பட்டி -பேரூர் ரோட்டில் புதுக்குளம், பேரூர் குளக்கரையில் ரோடு பெயரளவுக்கு போடப்பட்டது.

இதில் கனரக வாகனங்கள் அடிக்கடி சென்று, பல கி.மீ., தூரத்துக்கு ரோட்டின் பெரும்பகுதி குழியாக காணப்படுகிறது. இதில், வேடப்பட்டி அருகே உள்ள ரோடு, நமது நாளிதழில் வெளியான செய்தியால் சரி செய்யப்பட்டுள்ளது.

அஜ்ஜனூரில் சுமார் 15 அடி நீளத்துக்கு நடுரோட்டில், பல இடங்களில் பெரும் குழி உருவாகியுள்ளது. தற்காலிகமாக கற்களைக் கொட்டி இருந்தாலும், அதையும் தாண்டி மேலும் சாலை உள்வாங்கியுள்ளது.

அந்த வழியாக, பள்ளிகளுக்கு குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் பெற்றோர் அடிக்கடி தடுமாறி விழுகின்றனர். பெரும் விபத்து நடப்பதற்குள் சரி செய்ய வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'புதிதாக ரோடு போட்டு ஓராண்டுதான் ஆகியுள்ளது. ரோடு போட்டதுமே குழி விழுந்து விட்டது. ஆனால், அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவுமில்லை; சரி செய்யவுமில்லை. தரமில்லாத ரோட்டுக்கு ஒப்புதல் கொடுத்த அதிகாரிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us