நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை, குனியமுத்துாரை சேர்ந்தவர் பிரசாத் கண்ணன், 31. ஆவாரம்பாளையத்தில் பைக் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
கடந்த, 27ம் தேதி கடையை பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்றார். 29ம் தேதி கடையை திறக்க வந்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
கடைக்குள் சென்று பார்த்த போது, கடையில் இருந்த நான்கு பைக்குகள் திருடு போனது தெரிந்தது. புகாரின் பேரில், காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.-

