sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுல்தான்பேட்டைக்கு பஸ் வசதி இல்லை; கிராம மக்கள் அவதி

/

சுல்தான்பேட்டைக்கு பஸ் வசதி இல்லை; கிராம மக்கள் அவதி

சுல்தான்பேட்டைக்கு பஸ் வசதி இல்லை; கிராம மக்கள் அவதி

சுல்தான்பேட்டைக்கு பஸ் வசதி இல்லை; கிராம மக்கள் அவதி


ADDED : ஆக 08, 2024 11:39 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்:சுல்தான்பேட்டை ஒன்றிய கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், 20 ஊராட்சிகள் உள்ளன. 60க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்லடம், சூலுார், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் மூலம், வேலைக்கு சென்று வருகின்றனர்.

கிராமங்களில் உள்ள மாணவ மாணவிகள் பள்ளி, கல்லுாரிக்கு செல்ல பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் பஸ்களையே நம்பி உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே கிராமப்புறங்கள் வழியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் படிப்படியாக குறைக்கப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கிராமங்களில் உள்ள நாங்கள் வெளியிடங்களுக்கு செல்ல பஸ்களை மட்டுமே நம்பி உள்ளோம். தினமும் நான்கு முறை வந்து சென்ற பஸ்கள் இப்போது, இரு முறை மட்டுமே வருகிறது. பல ஊர்களுக்கு ஒரு முறை மட்டுமே பஸ் வந்து செல்கிறது. இதனால், அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் முடியாத நிலை உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் தினமும் அவதிப்படுவது வாடிக்கையாக உள்ளது.

பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. படிப்படியாக பஸ்களை குறைத்து விட்டால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆட்டோ, காரில் செல்லும் அளவுக்கு எங்களுக்கு வசதி கிடையாது. எனவே, ஏற்கனவே இயக்கப்பட்ட பஸ்களை அதே நேரங்களில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us