ADDED : ஜூன் 25, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையே நீடிக்கிறது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம் நல்ல தரமான, குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையில் மாற்றமில்லாமல், 40 ரூபாயாகவே நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 16,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முதல் தரமான இளநீருக்கு நல்ல விலை கிடைக்கிறது. சில தோப்புகளில் வறட்சியின் காரணமாகவும், இளநீர் தரம் குறைந்து காணப்படுகிறது. அது போன்ற தரம் குறைந்த இளநீர் குறைந்த விலைக்கு விற்பனை ஆகிறது. இளநீர் வரத்து மிக, மிக குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், வட மாநிலங்களில் இளநீரின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.