/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
/
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : பிப் 21, 2025 11:14 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில் கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி பொறியாளர் சந்தியா அந்தோணிமேரி மற்றும் வருவாய் துறையினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, டிப்பர் லாரியின் வாகன ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். லாரியில் 3 யூனிட் கிராவல் மண் இருந்தது.
இது உரிய அனுமதி இன்றி கள்ளத்தனமாக ஏற்றி வந்தது என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து லாரியை கிராவல் மண்ணுடன் கைப்பற்றி, உதவி பொறியாளர் காரமடை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தார்.
இதுதொடர்பாக போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.----