/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளி விலை சரிந்தது வரத்தும் அதிகரித்தது
/
தக்காளி விலை சரிந்தது வரத்தும் அதிகரித்தது
ADDED : ஜூலை 29, 2024 03:08 AM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் ஏராளமான விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். மேலும், காய்கள் வரத்து உயர்ந்தும் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்று தக்காளி பெட்டி (15 கிலோ) 300, தேங்காய் 18 - 20 (ஒன்று), கத்தரிக்காய் (கிலோ) - 65, முருங்கைகாய் - 30, வெண்டைக்காய் - 40, முள்ளங்கி - 23, வெள்ளரிக்காய் - 15, பூசணிக்காய் - 35,அரசாணிக்காய் - 22, பாகற்காய் - 40, புடலை - 30, சுரைக்காய் - 25, பீக்கங்காய் - 35, பீட்ரூட் - 40, அவரைக்காய் - 40, பச்சை மிளகாய் - 105 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதில், கடந்த வாரத்தை விட தற்போது தக்காளி (15 கிலோ பெட்டி) - 500, கத்தரிக்காய் - 25 (கிலோ), முருங்கைகாய் - 30, வெள்ளரிக்காய் - 8, பாகற்காய் - 10, அவரைக்காய் - 20 ரூபாய் விலை சரிந்துள்ளது. மற்றும் வெண்டைக்காய் - 15, பூசணிக்காய் - 14, சுரைக்காய் - 5, பீர்க்கன்காய் - 13 ரூபாய் விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு இருப்பதால் தக்காளி வரத்து அதிகரித்தும் விலை சரிந்தும் உள்ளது. இது மட்டுமின்றி, பெரும்பாலான காய்கள் விலையும் சரிந்துள்ளது.