sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவைக்கு தேவையான ரயில்கள்: பயணியர் எதிர்பார்ப்பு

/

கோவைக்கு தேவையான ரயில்கள்: பயணியர் எதிர்பார்ப்பு

கோவைக்கு தேவையான ரயில்கள்: பயணியர் எதிர்பார்ப்பு

கோவைக்கு தேவையான ரயில்கள்: பயணியர் எதிர்பார்ப்பு


ADDED : பிப் 25, 2025 10:18 PM

Google News

ADDED : பிப் 25, 2025 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ; கோவை மக்களுக்கு தேவையான ரயில்களை இயக்க, பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்னும் நிர்வாகம் கண்டுகொள்ளாமலேயே உள்ளதாகவும், அதிகரித்து வரும் ரயில் பயணிகளின் வசதிக்கேற்ப, கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் எனவும், ரயில் பயனாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தெற்கு ரயில்வேயில், சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக வருவாய் ஈட்டித் தரும் ரயில்வே ஸ்டேஷனாக, கோவை சந்திப்பு இருந்து வருகிறது. ஆனால், கோவை ரயில்வே மீது சேலம் கோட்ட நிர்வாகம், எப்போதும் பாராமுகமாகவே இருந்து வருகிறது.

கோவையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு, ரயில் இயக்க கோரிக்கை விடுத்தும், அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கோவை - ராமேஸ்வரம், கோவை - துாத்துக்குடி, கோவை - செங்கோட்டை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி, மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி ரயில்கள் தினசரி ரயில்களாக இயக்கப்பட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகள் குறித்து, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன் கூறுகையில், ''மதுரை - கோவை, கோவை - மதுரை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், போடிநாயக்கனுார் வரை நீட்டிக்கப்பட வேண்டும். கோவை - சேலம் மெமு மின்சார ரயில், மீண்டும் இயக்கப்பட வேண்டும். மன்னார்குடி - கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் பெட்டிகளை பயன்படுத்தி, கோவையில் இருந்து போடிநாயக்கனுார் வரை ரயில் இயக்கப்பட வேண்டும். கோவை மக்களின் நீண்டகால கோரிக்கைகளை, நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்காவிடம் இது குறித்து கேட்டதற்கு, ''பயணிகள், ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் விடுக்கும் கோரிக்கைகளை, மேலிடத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அவர்கள் ரயில் இயக்கத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து, அதன்படியே ரயில்களை இயக்குகின்றனர். அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். இருப்பினும், கோட்ட ரயில்வே துறை சார்பில், ரயில்கள் இயக்கத்துக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன,'' என்றார்.






      Dinamalar
      Follow us