sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நொய்யலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க 4 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள்

/

நொய்யலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க 4 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள்

நொய்யலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க 4 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள்

நொய்யலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க 4 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள்


ADDED : மார் 05, 2025 03:27 AM

Google News

ADDED : மார் 05, 2025 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை நகர்ப் பகுதி வழியாக பயணிக்கும் நொய்யல் ஆற்றில், கழிவு நீர் கலப்பதை தடுக்க, நான்கு இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுவதற்கு, மாநகராட்சிக்கு, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, மாநகராட்சி பகுதியை கடந்து திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில், 158.35 கி.மீ., பயணித்து, காவிரியில் கலக்கிறது.

இதில், பல இடங்களில் கழிவு நீர் கலக்கிறது; குப்பை கொட்டப்படுகிறது. இரு கரைகளிலும் ஆக்கிரமிப்புகள் ஏராளமாக உள்ளன. அதனால், நொய்யல் ஆறு சீரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணியை, 200 கோடி ரூபாயில் மேற்கொள்ள மாநகராட்சி உத்தேசித்துள்ளது.

முதல்கட்டமாக, மாநகராட்சி பகுதியை கடக்கும் ஆற்றின் இருபுறமும் நகரமைப்பு பிரிவினர் சர்வே எடுத்து கல் நட்டு வருகின்றனர். அடுத்த கட்டமாக, ஆறு சீரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைக்கு ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, நான்கு இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆற்றின் கரையை மேம்படுத்தி, இருபுறமும் பொழுதுபோக்கு கட்டமைப்பு ஏற்படுத்த, மாநகராட்சி திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது.






      Dinamalar
      Follow us