/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோர்ட் முன் கொலை முயற்சி : சாட்சி விசாரணை துவக்கம்
/
கோர்ட் முன் கொலை முயற்சி : சாட்சி விசாரணை துவக்கம்
கோர்ட் முன் கொலை முயற்சி : சாட்சி விசாரணை துவக்கம்
கோர்ட் முன் கொலை முயற்சி : சாட்சி விசாரணை துவக்கம்
ADDED : ஆக 23, 2024 08:11 PM
கோவை:கோர்ட் முன் நடந்த கொலை முயற்சி வழக்கில், சாட்சி விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், அம்மன் குளம் பகுதியை சேர்ந்த நவீன்குமார்,26, என்பவர், கொலை வழக்கில் கைதான, ஹரிஹரன், விஜயகுமார் ஆகியோர், கடந்த 2021ஆக., 27ல், ஆகியோர் , கோவை குண்டுவெடிப்பு வழக்கு கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தனர். அப்போது, கோர்ட் வாசலில் மறித்து, ஒரு கும்பல் கத்தியால் குத்த முயன்றது.
இது தொடர்பாக, நவீன்குமாரின் தந்தை கருப்பசாமி, பிரவீன்குமார், சங்கர், அஜய்குமார், காமேஷ், பார்த்திபன், சதீஷ், சங்கர், ராஜ்குமார், கப்பீஸ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு, கோவை நான்காவது கூடுதல் சார்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது, விசாரணை துவங்கப்பட்டுள்ளது.

