sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரண்டு நாட்கள் கூடுதல் பஸ்கள் இயக்கம்

/

இரண்டு நாட்கள் கூடுதல் பஸ்கள் இயக்கம்

இரண்டு நாட்கள் கூடுதல் பஸ்கள் இயக்கம்

இரண்டு நாட்கள் கூடுதல் பஸ்கள் இயக்கம்


ADDED : ஏப் 15, 2024 10:54 PM

Google News

ADDED : ஏப் 15, 2024 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:தேர்தலன்று ஓட்டுப்போடுவதற்கு, வாக்காளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, நாளையும் (17ம் தேதி), நாளை மறுதினமும் (18ம் தேதி) தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்கள் இயக்குகிறது.

வரும், 19ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. கோவையில் தொழில் நிமித்தமாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், தேர்தல் சமயங்களில் சொந்த ஊருக்குச் சென்று ஓட்டளித்து விட்டு, திரும்பி வருவர்.

இதுபோன்ற வாக்காளர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் வழக்கமான பஸ்களுடன், சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிட்டுள்ளது.

நாளை (17ம் தேதி), நாளை மறுதினம் (18ம் தேதி) காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, 120 டிரிப்புகள், சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, 200 டிரிப்புகள் கூடுதலாக இயக்கப்படும் என, அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us