ADDED : செப் 08, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
கிணத்துக்கடவு, அரசம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் நாராயணசாமி, 56, கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதிலட்சுமி, 46. பைக்கில் சென்ற இவர்கள் இருவரும், கல்லாபுரம் ரோட்டில் இருந்து சிக்கலாம்பாளையம் ரோட்டில் திரும்பும் போது, எதிரில் செட்டிபாளையத்தை சேர்ந்த லலித்குமார், 28, என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது.
விபத்தில், நாராயணசாமி, ஜோதிலட்சுமி இருவரும் காயமடைந்தனர். இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.