sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆவணி அவிட்டம் முன்னிட்டு பூணூல் மாற்றும் உபாகர்மா

/

ஆவணி அவிட்டம் முன்னிட்டு பூணூல் மாற்றும் உபாகர்மா

ஆவணி அவிட்டம் முன்னிட்டு பூணூல் மாற்றும் உபாகர்மா

ஆவணி அவிட்டம் முன்னிட்டு பூணூல் மாற்றும் உபாகர்மா


ADDED : ஆக 20, 2024 01:38 AM

Google News

ADDED : ஆக 20, 2024 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;ஆவணி அவிட்டமான நேற்று, கோவையில் பூணூல் மாற்றும் வைபவம் நடந்தது.

ஆவணி மாத பவுர்ணமி திதியும், அவிட்ட நட்சத்திரமும் இணைந்து வரும் நாள், ஆவணி அவிட்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், பழைய பூணூலை மாற்றி, புதிய பூணூல் அணிவர்.

முறையாக காயத்ரி மந்திரம் உபநயனம் செய்த பிராமணர்கள், இதை மேற்கொள்வர். இந்த சடங்கு முறைக்கு, 'உபாகர்மா' என்று பெயர்.

ராம் நகர் ராமர் கோவில் சார்பில், நேற்று நடந்த பூணூல் மாற்றும் வைபவத்தில், சுந்தரம் வாத்தியார், நடராஜ் வாத்தியார் ஆகியோர், பூணூல் மாற்றும் வைபவத்தை நடத்தி வைத்தனர்.

ராமர் கோவில் சார்பில் நடந்த உபாகர்மாவில், 300க்கும் மேற்பட்டோர் பூணூல் மாற்றிக் கொண்டனர். 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, என, கோவில் அறங்காவலர் விசுவநாதன் தெரிவித்தார்.

காலை 7:00 மணி முதல் மூன்று பிரிவாக, உபாகர்மா நடந்தது. முன்னோருக்குத் தர்ப்பணம் தருதல், ஹோமங்கள் நடந்தன. அசோகா பிரேமா திருமண மண்டபம், சதாசிவம் ஹால், வாணிஸ்ரீ மகால் உட்பட, கோவையில் பல்வேறு இடங்களில் நேற்று பூணூல் மாற்றும் வைபவம் நடந்தது. இன்று, காயத்ரி ஜெபம் நடைபெறவுள்ளது.






      Dinamalar
      Follow us